Showing posts with label ரகுமான். Show all posts
Showing posts with label ரகுமான். Show all posts

Monday, November 1, 2010

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இந்திரா விருது


காங்கிரஸ் சார்பில் தேசிய ஒற்றுமைக்கான ‘இந்திரா காந்தி விருது’ வழங்கும் விழா டெல்லியில்
நேற்று நடந்தது. இந்த ஆண்டு விருதை
ராமகிருஷ்ணா மிஷனை சேர்ந்த சுவாமி வியாப்தநந்தா, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ஆகியோர் இணைந்து பெற்றனர். அவர்களுக்கு பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் விருதை வழங்கினர்

Saturday, October 16, 2010

யாரையும் கவராத ஏ.ஆர்.ரஹ்மான் காமன்வெல்த் தீம் பாடல் !



காமன்வெல்த் போட்டிக்காக தான் போட்டுக் கொடுத்த தீம் பாடலின் ட்யூன் பிரபலமாகமால்
போனதற்காக மன்னிப்பும், வருத்தமும் தெரிவிப்பதாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், காமன்வெல்த் போட்டிக்கான தீம் பாடலின் ட்யூன் சரியில்லை, தரமானதாக இல்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன்.

இளைய தலைமுறையினரை மட்டும் குறித்து இந்தப் பாடல் வரிகள் இடம் பெற்று விட்டது. மற்றவர்களையும் அதில்சேர்த்திருக்க வேண்டும்.

இந்தப் பாடலும், ட்யூனும் மக்களைக் கவராமல் போய் விட்டது உண்மைதான். இதற்காக வருத்தப்படுகிறேன். எனது பாடலால் யாராவது ஏமாந்திருந்தால், என்னை மன்னித்து விடுங்கள்.

அடுத்த முறை இதுபோல நேரிடும்போது மிகவும் கவனமாக இருப்பேன்.
அனைவருக்கும் பொருத்தமான பாடலையும், ட்யூனையும் தேர்வு செய்வேன் என்றார் ரஹ்மான்.

காமன்வெல்த் போட்டிக்கான தீம் பாடல் யாரையும் கவரவில்லை என்ற தகவல் பரவியதைத் தொடர்ந்து அதை சரி செய்யும் முயற்சியிலும் ஈடுபட்டார் ரஹ்மான். இருப்பினும் இந்தப் பாடல் யாருக்குமே பிடிக்காமல் போய் விட்டது குறிப்பிடத்தக்கது.